ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய அதுல்யா ரவி, இந்துஜா!

 

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய அதுல்யா ரவி, இந்துஜா!

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சியில் நடிகைகள் இந்துஜா மற்றும் அதுல்யா ரவி கலந்துகொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினர். 

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய அதுல்யா ரவி, இந்துஜா!

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சியில் நடிகைகள் இந்துஜா மற்றும் அதுல்யா ரவி கலந்துகொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினர். 

நிகழ்ச்சியில் பேசிய நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் இந்த குழந்தைகளை சந்தித்தபோது அடைந்தேன். இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை அதுல்யா ரவி, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” எனக் கூறினார்.