ஆண் குழந்தை வரம் தரும்கிருஷ்ண ஜன்மாஷ்டமியை எப்படி வழிபடுவது?

 

ஆண் குழந்தை வரம் தரும்கிருஷ்ண ஜன்மாஷ்டமியை எப்படி வழிபடுவது?

இந்துக்களின் பண்டிகைகளில் சிவனுக்கு சிறப்பான, உகந்த நாளாக சிவராத்திரியைச் சொல்கிறோம். அதேபோல் அம்பாளுக்கு மிகவும் விசேஷமான பண்டிகையாக ஒன்பது நாட்களையும் சேர்த்து நவராத்திரியைக் கொண்டாடுகிறோம். நவமியில் பிறந்த ராமரையும் கூட அவரது பெயராலேயே ராமநவமி என்று கொண்டாடுகிறோம். கந்த சஷ்டி என்று சொல்லும் போது கூட கந்தனுடைய பெயரிலேயே கொண்டாடி வருகிறோம்.

ஆண் குழந்தை வரம் தரும்கிருஷ்ண ஜன்மாஷ்டமியை எப்படி வழிபடுவது?

இந்துக்களின் பண்டிகைகளில் சிவனுக்கு சிறப்பான, உகந்த நாளாக சிவராத்திரியைச் சொல்கிறோம். அதேபோல் அம்பாளுக்கு மிகவும் விசேஷமான பண்டிகையாக ஒன்பது நாட்களையும் சேர்த்து நவராத்திரியைக் கொண்டாடுகிறோம். நவமியில் பிறந்த ராமரையும் கூட அவரது பெயராலேயே ராமநவமி என்று கொண்டாடுகிறோம். கந்த சஷ்டி என்று சொல்லும் போது கூட கந்தனுடைய பெயரிலேயே கொண்டாடி வருகிறோம். ஆனால் கிருஷ்ணனை மட்டும் தான் அவருடைய பெயரில்

krishnar

பண்டிகையைக் கொண்டாடாமல், அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று சொல்லி வழிபட்டு கொண்டாடி வருகிறோம். 
ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர் கடவுள்களை எல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள். முழுமையான அவதாரமாக கிருஷ்ணரைக் கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப் படுகிறது. கோகுலாஷ்டமியை ஸ்ரீ ஜெயந்தி என்றும் சொல்லுவார்கள். காரணம் லட்சுமியை பிரதானமாக வைத்துக் கொண்டு ஜெயந்தி கொண்டாடும் போது ஸ்ரீஜெயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். மற்ற அனைவரும் பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள். 

மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத் ஷேத்திரத்தில் பிரதாப பட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துக் கொண்டு கிருஷ்ணர் வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது. பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் இன்றைய நாளில் கேட்க வேண்டும்.  இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் நிச்சயம் கிடைக்கும்.  கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகளைப் படிக்க வேண்டும்.  துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய எனும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம்  காட்ட வேண்டும். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்த பிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி வழிபடலாம். முக்கியமாக நம் வீட்டில் பூஜைகளை செய்து முடித்தப் பிறகு தான் ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும். நாம் வசிக்கும் இடத்தை இருளில் மூழ்க வைத்து விட்டு, ஆலயங்களுக்குச் செல்வதால் ஒரு பயனும் கிடைக்காது. கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.