ஆண் குழந்தைக்கு அம்மாவான ரம்பா!

 

ஆண் குழந்தைக்கு அம்மாவான ரம்பா!

தமிழ்-தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா மூன்றாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

டொரண்டோ: தமிழ்-தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா மூன்றாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

90-களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக திகழ்ந்த ரம்பா, கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் ரை திருமணம் செய்துக் கொண்டு கனடாவில் செட்டிலானார். அதைத் தொடர்ந்து நடிப்பை தவிர்த்துவிட்டு குடும்பப்பெண்ணாக மாறிய ரம்பா, கடந்த 2011ம் ஆண்டு லாண்யா என்ற பெண் குழந்தைக்கு தாயானார். அவருக்கு அடுத்து, 2015ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

Ramba

இந்நிலையில், கணவர் இந்திரகுமாருக்கும் ரம்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் விவாகரத்துக்கு கோரி நீதிமன்றத்தை நாடினர். மேலும், தனக்கும் தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் இந்திரகுமார் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என ரம்பா வலியுறுத்தினார்.

RambaFamily

இதையடுத்து, இருவருக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டதையடுத்து, இருவரும் சமரசமாகி மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினர். அதன் பரிசாக இந்த ஆண்டு குடும்பத்தில் புதுவரவாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக இந்திரகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.