ஆண்டிபட்டியில் விஜய் சேதுபதி அலப்பரை

 

ஆண்டிபட்டியில் விஜய் சேதுபதி அலப்பரை

தன்னை காண வந்த ரசிகர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தார்.

சென்னை: தன்னை காண வந்த ரசிகர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தார்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களோடு படங்கள் தயாராகி வருகின்றன, தற்போது அவர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நான்காவது படமாக நடித்து வருகிறார்.  

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தேனியை மையமாக வைத்துதான் நடந்து வருகிறது. படத்தில் ஆட்டோ ஓட்டுனராக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதனால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு விஜய் சேதுபதி கொஞ்சமும் தயங்காமல் நடித்துக்கொடுத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆண்டிபட்டியில் நடந்தது. அப்போது அங்கு வந்த கிராமத்து மனிதர்கள் விஜய் சேதுபதியைப் பார்ப்பதற்காக ஷேர் ஆட்டோ பிடித்து வந்திருப்பதாகவும் அதனால் பார்த்து விட்டுதான் போவோம் என்று காத்திருந்திருக்கிறார்கள்.  இதைக்கேள்விபட்ட விஜய் சேதுபதி பாதியில் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அவர்களுடன் போட்டோ எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். 

அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுனர்களுடன் சகஜமாக பழகி படத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி, “தென்மேற்குப் பருவக்காற்றாய் என் நெஞ்சத்தில் வந்து இடம் பொருள் ஏவல் தந்த தர்மதுரை மாமனிதன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி” என்று விஜய் சேதுபதி குறித்து கவிதை எழுதியிருக்கிறார் சீனு ராமசாமி.