ஆண்குழந்தை வேண்டுமா,மகாராஷ்ட்ரா சாமியாரின் அருள்.வாக்கை கேளுங்கள்!

 

ஆண்குழந்தை வேண்டுமா,மகாராஷ்ட்ரா சாமியாரின் அருள்.வாக்கை கேளுங்கள்!

இந்தூரிகர் மகராஜ் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் செல்வாக்குள்ள மதப் பிரசங்கி. இவரை சமீபத்தில் நடந்த  மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் நிற்கும்படி பிஜேபி வற்புறுத்தும் அளவுக்குச் செல்வாக்கு உள்ளவர்.பிஜேபியில் சேரவோ தேர்தலில் நிற்கவோ விருப்பம் இல்லை என்று அப்போது மறுத்துவிட்ட இந்தூரிகர் மகராஜ் இப்போது  பிஜேபி தலைவர்களின் வழியில் ஒரு அபூர்வ அறிவியல் கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தூரிகர் மகராஜ் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் செல்வாக்குள்ள மதப் பிரசங்கி. இவரை சமீபத்தில் நடந்த  மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் நிற்கும்படி பிஜேபி வற்புறுத்தும் அளவுக்குச் செல்வாக்கு உள்ளவர்.பிஜேபியில் சேரவோ தேர்தலில் நிற்கவோ விருப்பம் இல்லை என்று அப்போது மறுத்துவிட்ட இந்தூரிகர் மகராஜ் இப்போது  பிஜேபி தலைவர்களின் வழியில் ஒரு அபூர்வ அறிவியல் கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

maharaj

அகமதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய போது அவர் இந்த ரகசியங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.உங்களுக்கு ஆண்குழந்தை வேண்டுமா, இரட்டைப்படை எண்ணால் அமைந்த தேதியில் உறவு கொள்ளுங்கள் ஆண்குழந்தை பிறக்கும்.ஒற்றைப்படை எண்ணில் அமைந்த தேதியில் உறவுகொண்டால் பெண்குழந்தை பிறக்கும் என்று சொல்லி இருக்கும் இந்தூரிகர் மகராஜ் இது தொடர்பாக இரண்டு எச்சரிக்கைகளையும் விடுத்திருகிறார். 

maharaja

தவறான நாளில் உறவு கொள்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தரமற்றவையாக இருக்கும்.அமங்கலமான நேரத்தில் உறவு கொண்டதால் பிறக்கும் குழந்தையால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று மேலும் சொல்லி இருக்கிறார்.

அவரது இந்தப்பேச்சு சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தூரிகர் மகராஜ் மீது கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என சோதனை செய்வதற்கு எதிரான சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.