ஆண்களும் பெண்களும் சமம் என்று சொல்வது முட்டாள் தனம்: நடிகை ஓவியா அதிரடி!

 

ஆண்களும் பெண்களும் சமம் என்று சொல்வது முட்டாள் தனம்: நடிகை ஓவியா அதிரடி!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்  அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் குறித்த ஓவியாவின் பதிவு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: பெண்களுக்கு எதிரான வன்முறைகள்  அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் குறித்த ஓவியாவின் பதிவு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது இவர், ஓவியாவ விட்டா யாரு சீனி, 90 எம்.எல், கணேஷா மீண்டும் சந்திப்போம், சிலுக்குவார்பட்டி சிங்கம், காஞ்சனா 3, களவாணி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வில்லியம் கோல்டிங்கின் வாசகங்களைப் பகிர்ந்துள்ளார்.அதில்,  ‘ஆண்களும் பெண்களும் சமம் என்று சொல்வது முட்டாள் தனமானது. நீங்கள் எதைக் கொடுத்தாலும் அதை சிறப்படையச் செய்யும் வல்லமை பெண்களுக்கு உண்டு. விந்தணுக்களுக்கு குழந்தை, வீட்டுக்கு இருப்பிடம், சமையல் பொருட்களுக்கு சாப்பாடு என ஆண்கள் கொடுக்கும் ஒவ்வொன்றையும் சிறப்பாக மாற்றும் பெண்கள், உங்களின் புன்னகைக்கு அவர்களது இதயத்தையே தருவார்கள். அதுபோல நீங்கள் கொடுக்கும் தொல்லைகளையும், பல மடங்கு திருப்பி தருவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களைப்  பற்றிய ஓவியாவின் இந்தப் பதிவு பெண்  ரசிகைகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.