ஆண்களுக்கான கருத்தடை ஊசி தயார்…இந்திய மருத்துவ கவுன்சில் சாதனை!

 

ஆண்களுக்கான கருத்தடை ஊசி தயார்…இந்திய மருத்துவ கவுன்சில் சாதனை!

அதை சோதனைக்கு உட்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. சுமார் 303 ஆண்களிடம் மூன்று கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில், 97.3 சதவிகிதம்  வெற்றி கிட்டியுள்ளது. 

உலகிலேயே முதன் முதலாக கருத்தடை ஊசிகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வு இந்தியாவில் அரங்கேறியுள்ளது. 

pregnant

கருத்தடை மாத்திரைகள், சாதனங்கள் ஆகியவை சந்தையில் கிடைக்கிறது. ஆனால்  இவை அனைத்தும் பெண்களுக்கு ஏற்றவாறே வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் முதன் முதலாக ஆண்களுக்கான கருத்தடை ஊசிகளைக் கண்டுபிடித்துள்ளது. மேலும் அதை சோதனைக்கு உட்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. சுமார் 303 ஆண்களிடம் மூன்று கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில், 97.3 சதவிகிதம்  வெற்றி கிட்டியுள்ளது. 

injec

இந்த ஊசியின் வீரியம் 13 ஆண்டுகள்  இருக்கும் என்றும் அதன்பிறகு இது செயலிழக்க ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஊசியால் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த ஊசிக்கான ஒப்புதலுக்கு மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். ஒருவேளை ஒப்புதல் அளிக்கப்பட்டால்  உலகிலேயே முதன் முதலாகக் கருத்தடை ஊசிகளைக் கண்டுபிடித்த நாடு இந்தியா என்ற பெருமை கிடைக்கும்.