ஆண்களின் பிறப்புறுப்பை துண்டித்த சைக்கோ கில்லர் கைது!

 

ஆண்களின் பிறப்புறுப்பை துண்டித்த சைக்கோ கில்லர் கைது!

ஓரினச்சேர்க்கைக்காக ஆண்களின் பிறப்புறுப்பைத்  துண்டித்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை: ஓரினச்சேர்க்கைக்காக ஆண்களின் பிறப்புறுப்பைத்  துண்டித்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 

கூடங்குளத்தைச் சேர்ந்தவர்  நாராயணன். இவர்  சென்னை மாதவரம் ரெட்டேரி  மேம்பாலத்தின்  கீழ்  மதுபோதையில் கடந்த 4ஆம் தேய்  இரவு படுத்துத் தூங்கியுள்ளார்.  போதையிலிருந்த நாராயணனின் பிறப்புறுப்பை யாரோ துண்டித்துள்ளனர்.  இதையடுத்து அவருக்கு  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

psycho

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை ஓரினச் சேர்க்கைக்கு ஒருவர் அழைத்தார் என்றும் அதற்குத் தான் மறுப்பு தெரிவித்ததால் பிறப்புறுப்பைத் துண்டித்தார் என்றும் பகீர் வாக்குமூலம் அளித்தார்.

psycho

இதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாதவரம் இரட்டை ஏரி மேம்பாலத்தின்  கீழ்  படுத்திருந்த கொளத்தூரைச் சேர்ந்த அஸ்லம்பாஷா என்பவரின்  பிறப்புறுப்பு  துண்டிக்கப்பட்டது. இது குறித்துக் கூறிய அவர், குடும்ப தகராறு காரணமாகத் தானே இப்படிச் செய்து கொண்டதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்திருந்தனர்.

psycho

இது போன்ற தொடர் சம்பவத்தால்   தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அங்கிருந்த பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த  சிசிடிவி கேமராவில்  சந்தேகத்திற்கிடமான ஒருவரின் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்  சைக்கோ கொலையாளியைக் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.