ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனமானது: துரைமுருகன் சர்ச்சை பேச்சு

 

ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனமானது: துரைமுருகன் சர்ச்சை பேச்சு

திருநெல்வேலி: ஆணுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனமானது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தன் பால் ஈர்ப்பில் ஈடுபடுவது குற்றமல்ல கூறி சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அண்மையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனம். காட்டுமிராண்டித்தனத்திற்கு சட்டமும் சிலரும் துணைபோகிறார்கள் என பேசினார். அவரது இந்த பேச்சு தற்போது விவாதமாகி இருக்கிறது.