ஆணாக வேடமிட்டு சிறுமிகளை காதல் வலையில் சிக்க வைத்த இளம்பெண்: ஷாக் ரிப்போர்ட்!

 

ஆணாக வேடமிட்டு சிறுமிகளை காதல் வலையில் சிக்க வைத்த இளம்பெண்: ஷாக் ரிப்போர்ட்!

ஆண் வேடமிட்டு பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து வந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு : ஆண் வேடமிட்டு பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து வந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு அருகே கொடுமுடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தன் உறவுக்காரர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது விஷ்ணுபாலா என்பவரை பார்த்துள்ளார். அப்போது உறவுக்காரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட விஷ்ணுபாலா, சிறுமியிடம் நட்பாக பழகியதுடன், சிறுமியை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் வீட்டிற்கு தெரியாமல் தனிமையில் அப்பெண்ணைச் சந்திப்பதுடன் அவளது வீட்டிற்கும் சென்று வந்துள்ளார்.

love

இதையடுத்து வீட்டிலிருந்த 15 சவரன் நகை காணாமல் போக, சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரணை நடித்தியுள்ளனர். அப்போது அவர் தனது காதலனுக்கு கொடுத்து விட்டதாக கூறிய நிலையில், விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்று எண்ணிய அவர்கள், யாருக்கும் சொல்லாமல் யார் அந்த விஷ்ணுபாலா என்று தேடி வந்துள்ளனர். ஆனால்  அவர் கையில் அகப்படவில்லை. 

love

இதை தொடர்ந்து மீண்டும் வீட்டிலிருந்து 3 சவரன் நகை மாயமாக, காதலர் பணத்தேவை என்று கூறியதால் அவரிடம் கொடுத்து விட்டேன் என்று மீண்டும் அப்பெண் கூறியதைக் கேட்ட பெற்றோர் இவ்விவகாரத்தின் விபரீதத்தை உணர்ந்து போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை வைத்தே விஷ்ணுபாலாவை வீட்டிற்கு வரவழைத்தனர். விஷ்ணுபாலாவும் சிறுமியின் வீட்டிற்கு வர, போலீசாரை அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

love

விசாரணையில் அவர் ஆண்  வேடமிட்ட காங்கேயத்தை சேர்ந்த சரோஜா என்ற பெண் என்பது தெரியவந்தது. பெண்களின் மீது கொண்ட ஆசையின் காரணமாக ஆண்  வேடமிட்டு பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து வந்துள்ளார். இதையடுத்து சரோஜாவிடமிருந்து 34 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாரி கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: கள்ளகாதலால் நடந்த விபரீதம்: இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர்; சேலத்தில் பரபரப்பு!