ஆட வந்த பெண்ணை ஆபாச தொழிலில் ஈடுபடுத்திய இந்திய தம்பதி… சிங்கப்பூரில் கைது

 

ஆட வந்த பெண்ணை ஆபாச தொழிலில் ஈடுபடுத்திய இந்திய தம்பதி… சிங்கப்பூரில் கைது

பல வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிப்பிடமாக இருக்கும் சிங்கப்பூரில், பெண் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற முதல் குற்றவாளி இந்த இந்திய தம்பதிகள் தான்.

இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் தங்களிடம் வேலைக்கு வந்த பெண்ணை பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் தாங்கள் நடத்திய  இரவு விடுதியில் நடனமாடுவதற்காக வேலைக்கு சேர்த்த மூன்று பங்களாதேஷ் பெண்களை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிப்பிடமாக இருக்கும் சிங்கப்பூரில், பெண் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற முதல் குற்றவாளி இந்த இந்திய தம்பதிகள் தான்.

மேலும் இந்த தம்பதிக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததற்கு, இந்திய மதிப்பில் ரூ.2,50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.