ஆட்டோ மேல் தோட்டம் அமைத்த டிரைவர்; காரணம் என்ன?

 

ஆட்டோ மேல் தோட்டம் அமைத்த டிரைவர்; காரணம் என்ன?

கொல்கத்தாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிஜய் பால், கொளுத்தும் வெயிலை சமாளிக்க தன் ஆட்டோவின் மேல் ஒரு தோட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஆட்டோவின் மேல் புற்களை வைத்து தோட்டம் போல மாற்றியுள்ளார். கடும் வெயிலில் தன் ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு குளிர்ந்த அனுபவத்தை தர எண்ணிய பிஜய் பால், இதற்கான முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருக்கிறார்.

summer

ஆட்டோவின் மேல் எப்படி தோட்டத்தை அமைக்க முடியும் என்று பல தோட்டக்காரர்களிடம் கேட்டு, யாரும் உரிய பதிலளிக்காததால் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். பின்னர், ஒரு தோட்டக்காரர் கொடுத்த யுக்தியை வைத்து, புற்களை முதலில் வளர்த்து, அதன் பின்னர், செடிகளை வளர்க்க முடியும் என்று அறிந்து கொண்டு அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

auto

இந்த புதிய ஐடியா, வாடிக்கையாளர்களை இவர் ஆட்டோ பக்கம் இழுப்பதற்கு மிகவும் உதவியாய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை செடி மற்றும் மரக் கன்றுகளை நட்டு வளர்க்க பயன்படுத்தும் பிஜய், நம்முடைய உலகம் வெப்பமயமாகி வருவதை தவிர்க்க, அனைவரும் தங்கள் வீட்டில் இதுபோன்று செடிகளையும் மரங்களையும் நட்டு வளர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க

அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் துவங்கிவிட்டேன்; #HBDPrabhuDeva