ஆட்டோவில் சென்றார் -பேச முடியாமல் வந்தார் -ஹோட்டல் நடத்திய பெண்ணின் பரிதாப நிலை

 

ஆட்டோவில் சென்றார் -பேச முடியாமல் வந்தார் -ஹோட்டல் நடத்திய பெண்ணின் பரிதாப நிலை

ஒரு பெண்ணை ஆட்டோவில் கூட்டி சென்று பலாத்காரம் செய்த ஆட்டோ ட்ரைவரை போலீசார் கைது செய்தனர்

ஆட்டோவில் சென்றார் -பேச முடியாமல் வந்தார் -ஹோட்டல் நடத்திய பெண்ணின் பரிதாப நிலை


உத்தரபிரதேச மொராதாபாத்தில் சிவில் லைன்ஸ் பகுதியில் ஒரு 14 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து ஒரு உணவு கடையை வைத்திருக்கிறார்.அந்த கடைக்கு 21 வயதான ஒரு ஆட்டோ டிரைவர் அடிக்கடி சாப்பிட வருவார் .அப்போதெல்லாம் அந்த கடையில் அவருக்கு பரிமாறும் அந்த 14 வயதான பெண் மீது ஒரு கண் வைத்தார் .அதனால் அவர் எப்படியாவது அந்த சிறுமியை தூக்கி கொண்டு போக ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி, அடிக்கடி அந்த கடைக்கு சாப்பிட வருவது போல வருவார் .
கடந்த மார்ச் 7 ஆம் தேதி அந்த பெண் தன்னுடைய கடைக்கு தேவையான பொருட்களை வாங்க தனியாக சென்றார் .அப்போது அந்த ஆட்டோகாரன் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து,தான் ஆட்டோவில் கடைக்கு கூட்டி செல்வதாக அந்த பெண்ணிடம் கூறினார் .அதை நம்பிய அவர் அந்த ஆட்டோவில் சென்றார் .அதன் பிறகு அந்த ஆட்டோக்காரர் அந்த பெண்ணை ஒரு தனியான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு,இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு ஓடி விட்டார் .
அதனால் அந்த பெண் அந்த அதிர்ச்சியில் பேச்சு வராமல் இருந்தார் .அதன் பிறகு அவரின் உறவினர்கள் அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்கு அவரால் பேச முடியவில்லை .பின்னர் மறுநாள் அவர் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அந்த ஆட்டோக்காரனால் நடந்த கொடுமைகளை கூரினார் .அதன் பிறகு போலீசில் புகாரளிக்கப்பட்டது .பொலிஸார் அந்த ஆட்டோக்காரரை பிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்

ஆட்டோவில் சென்றார் -பேச முடியாமல் வந்தார் -ஹோட்டல் நடத்திய பெண்ணின் பரிதாப நிலை