ஆட்டோவில் ஏறினால் அங்கேயும் ….பைக்கில் ஏறினால் அங்கேயும் .”ரேப் ரேஸ்”நடத்தி ..பலாத்காரத்துக்குள்ளான பெண்…

 

ஆட்டோவில் ஏறினால் அங்கேயும் ….பைக்கில் ஏறினால் அங்கேயும் .”ரேப் ரேஸ்”நடத்தி ..பலாத்காரத்துக்குள்ளான பெண்…

பிப்ரவரி 18 ம் தேதி புறநகர் காட்கோபரில் ஒரு பெண் தனது உறவினர்களுடன் இருந்தபோது ரயிலை தவற விட்டார் .பின்னர் அந்த பெண் மற்றொரு ரயிலில் ஏறி பிப்ரவரி 18 இரவு தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா ரயில் நிலையத்தை அடைந்து அங்கு  தூங்கினார்.

நவி மும்பையில் பிப்ரவரி 19 இரவு- இரண்டு மணி நேரத்திற்குள் இரண்டு தனித்தனியான சம்பவங்களில் 19 வயது பெண் மூன்று ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் .
பிப்ரவரி 18 ம் தேதி புறநகர் காட்கோபரில் ஒரு பெண் தனது உறவினர்களுடன் இருந்தபோது ரயிலை தவற விட்டார் .பின்னர் அந்த பெண் மற்றொரு ரயிலில் ஏறி பிப்ரவரி 18 இரவு தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா ரயில் நிலையத்தை அடைந்து அங்கு  தூங்கினார்.
பிறகு இரவு 8:30 மணியளவில், ஒரு ஹோட்டலின் அருகே வந்து, ஒரு ஆட்டோ டிரைவரிடம்  அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இறக்கிவிடச் சொன்னார் .ஆனால் அந்த ,ஆட்டோ டிரைவர், நவி மும்பையில் உள்ள மஹாபே பகுதியில் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு  அந்தப் பெண்ணை அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே விட்டுவிட்டார்.
இரவு 10 மணியளவில், அப்பெண் அருகிலுள்ள ரயில் நிலையத்தை கண்டுபிடிக்க  பைக்கில்  சவாரி செய்த இரண்டு ஆண்களின் உதவியை  நாடினார்.
ஆனால் அந்த இருவரும் ரயில் நிலையத்தில் விடுவதாக கூறி ,இருசக்கர வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு  கன்சோலி அருகே ஒரு தனியான  பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்” .கடுமையாக பாதிப்புக்குள்ளான அந்த பெண், பிப்ரவரி 23 அன்று ரபாலே எம்ஐடிசி காவல் நிலையத்தில் சென்று புகாரளித்ததில் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த பெண் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு , மூவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.