ஆட்டோகிராஃப் வாங்குவது போல் நடிகையிடம் சில்மிஷம் செய்த ரசிகர்!

 

ஆட்டோகிராஃப் வாங்குவது போல் நடிகையிடம் சில்மிஷம் செய்த ரசிகர்!

சின்னதிரை நடிகை ராணி பிரான்க் ஷோ மூலம் தனக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 சென்னை: சின்னதிரை நடிகை ராணி பிரான்க் ஷோ மூலம் தனக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராணி. பெரும்பாலான சீரியல்களில் வில்லியாகவே நடித்து வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவர் சமீபத்தில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பிரான்க் ஷோவால் பாதிக்கப்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ‘ஒரு சீரியல் படப்பிடிப்பில் மதிய உணவு சாப்பிட்டு ஸ்பாட்டுக்கு வந்தேன், அப்போது ஒருவர் என்னிடம் ஆட்டோகிராப், மற்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார். நானும் மறுக்காமல் அவருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்துவிட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். 

rani

 
ஆனால் அந்த நபர் என் மீது மோசமாக உரசினார். நான் கோபமாக என்ன வேண்டும் என கேட்க, அவர் நீ தான் வேண்டும் என கூறியதும் நான் அதிர்ச்சியடைந்தேன். பின் தன்னுடைய காதின் அருகில் வந்து கத்தி விட்டு ஓடிவிட்டார். பின்பு தான் தெரிய வந்தது அது ஒரு பிரான்க் ஷோ என்று.

rani

 அவர் கத்தியதால் சரியாக காது கேட்காமல் ஒரு வாரம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தேன்.ஆனால் நான் பட்ட அத்தனை கஷ்டத்துக்குப் பின்பு தான் தெரிந்தது, அது ஒரு பிரான்க் ஷோ என்று. இது போன்ற நிகழ்ச்சியைத் தடை செய்த நீதிமன்றத்திற்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிஎம் நரேந்திர மோடி பட வழக்கு தள்ளுபடி; டிரெய்லரை கூட பார்க்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதி