ஆட்டை கடிச்சு மாட்டை கற்பழிச்சி…. சீரியல் ரேப்பிஸ்ட் கைது. சீய்ய்ய். நாடு எங்கய்யா போகுது?

 

ஆட்டை கடிச்சு மாட்டை கற்பழிச்சி…. சீரியல் ரேப்பிஸ்ட் கைது. சீய்ய்ய். நாடு எங்கய்யா போகுது?

உத்தர பிரதேசம், அயோத்தியாவில் ராஜ்குமார் என்பவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

உத்தர பிரதேசம், அயோத்தியாவில் ராஜ்குமார் என்பவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். அவன் மீதான புகார், பாலியல் வன்முறை – கற்பழிப்பு. பாதிக்கப்பட்ட நபரால் காவல் நிலையம் வந்து புகார் தரமுடியாத நிலைமை.

ஏன்? வன்முறைக்கு ஆளானதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளாரா?

இல்லை.

பிறகு, எழுத படிக்க தெரியாதவரா?

ஆம்.

பரவாயில்லை, என்ன நடந்ததுன்னு அவரை சொல்ல சொல்லுங்கள், நாங்கள் புகாராக எழுதிக்கொள்கிறோம்.

இல்லை முடியாது.

ஏன்?

அவரால் பேச முடியாது

ஓ, மாற்றுத்திறனாளியா? வாய் பேச முடியாதவரா?

அட நீங்க வேறய்யா, பாதிக்கப்பட்டது வாய் பேச முடியாதவரல்ல. வாயில்லா ஜீவன்யா அது. மாட்டை கற்பழிச்சிருக்கான்.

அயோத்யாவில் கார்தியால்யா பாபா ஆஸ்ரமத்திற்கு சொந்தமான பசுக்கள் பாதுகாப்பு மையத்தில்தான் இந்த கொடுமை தொடர்ச்சியாக நடந்து வந்திருக்கிறது. சில நாட்களாகவே மையத்தில் ஏதோ தவறுதலாக நடப்பதை உணர்ந்த பொறுப்பாளர்கள், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். அப்பொழுதுதான் தொடர்ச்சியாக இந்த காமகொடூரன் இந்த வேலையை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அடுத்த நாளும் அவன் இம்மாபாதக செயலை செய்யும்போது, கையும் கற்பழிப்புமாக பிடிபட்டான்.

பசிக்காக ஒருவேளை உணவு திருடியவனையே பச்சாதாபம் பார்க்காமல் போட்டுத்தள்ளும் தேசத்தில், மாட்டை கற்பழித்தவனை சும்மா விடுவார்கள். அலாரம் வச்சு அடிச்சு பழகியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் போதும் செத்துறப் போறான்னு போலீஸை வரச்சொல்ல, அவர்கள் அடுத்த ஷிஃப்டை ராஜ்குமாரிடம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏன்டா இப்புடி பண்ணினே என கேட்டதற்கு அவன் சொன்ன பதில், ஓவரா குடிச்சுட்டேன், என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியலைன்னு சொல்லிருக்கான். அடப்பாவி, எங்க ஊர்ல எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும், குடிச்சுட்டான்னா குழந்தையா மாறிடுவான்டா. நீங்களும்தான் இருக்கீங்களே!