ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற நபர்.. சாதிக் கொடுமையால் எடுத்த விபரீத முடிவு !

 

ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற நபர்.. சாதிக் கொடுமையால் எடுத்த விபரீத முடிவு !

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். சரவணனும் அகிலாவும் ஒரே ஜாதியாக இருந்தும் அவர்கள் வேறு வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் திருமணத்தைச் சரவணனின் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாம். அதனால் அவர்கள் சரவணன்-அகிலா தம்பதியை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். சரவணன் எவ்வளவோ அவரின் உறவினர்களுடன் பேச முயன்றும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

ttn

இதனால் மனமுடைந்த சரவணன் வீட்டை விட்டு வெளியேறி அரசு புறம்போக்கு நிலத்தில் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். இவர்கள் ஊரை விட்டு வெளியேறிய பிறகு சரவணனின் உறவினர்கள், சரவணனும் அவரது பெற்றோரும் வாழ்ந்த வீட்டை விற்க முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த சரவணன் காவல்நிலையத்திலும் ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளார். ஆனால், இது சம்பந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 

ttn

இதனால் உடைந்து போன சரவணன், நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் தீ குளிக்க முயன்றார். அதனைப் பார்த்த போலீசாரும், பொதுமக்களும் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.