ஆடையின்றி நடித்துள்ள அமலா பாலின் படத்தை தடை செய்யுங்கள்: ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்!

 

ஆடையின்றி நடித்துள்ள  அமலா பாலின் படத்தை தடை செய்யுங்கள்: ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்!

இயக்குநர் ரத்தினகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ள திரைப்படம் ஆடை.

சென்னை: அமலா பால் நடித்துள்ள ஆடை திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜேஸ்வரி பிரியா  டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

amala

இயக்குநர் ரத்தினகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ள திரைப்படம் ஆடை.  இதில் அமலா பால் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இதையடுத்து  தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த திரைப்படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே 80 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது.இதையடுத்து  ஆடை திரைப்படம்  இம்மாதம் 19 ஆம் தேதி  திரைக்கு வரவுள்ளது. 

priya

இந்நிலையில், அனைத்து அரசியல் மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘நடிகை அமலாபால் சமுதாயத்தைச் சீரழிக்கும் விதத்தில் ஆடை  படத்தில் ஆடையின்றி நடித்துள்ளார் .  பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த தருணத்தில் ஆடை திரைப்படம் வெளியாகக் கூடாது. அதைத் தடை செய்ய வேண்டும்’ என்று புகார் மனு அளித்துள்ளார்.