ஆடு மேய்த்த பெண்களிடம் பாலியல் தொல்லை! சிக்கிக் கொண்ட இலங்கைத் தமிழர்!

 

ஆடு மேய்த்த பெண்களிடம் பாலியல் தொல்லை! சிக்கிக் கொண்ட இலங்கைத் தமிழர்!

தமிழகத்தில் சமீப காலங்களாய் அதிகளவில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் புள்ளியம்பாளையம் பகுதியில் அருகில் உள்ள தோட்டங்களில் வழக்கமாக சிலப் பெண்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பது வாடிக்கை. சம்பவத்தன்று வழக்கமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு விடும் இடத்தில் சில பெண்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளனர்

தமிழகத்தில் சமீப காலங்களாய் அதிகளவில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் புள்ளியம்பாளையம் பகுதியில் அருகில் உள்ள தோட்டங்களில் வழக்கமாக சிலப் பெண்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பது வாடிக்கை. சம்பவத்தன்று வழக்கமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு விடும் இடத்தில் சில பெண்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த ஒருவர், பெண்கள் சிலர் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், வண்டியை ரோட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்களிடம்  பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். பின், அந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. யாரோ வழிப்போக்கன் ஒருவன், திடீரென்று தங்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதை அறிந்து, பயத்திலும், அதிர்ச்சியிலும் அப்பெண்கள் கூச்சலிட்டனர். 

women

பெண்களின் அலறல் சப்தம் கேட்டு, உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவரை விரட்டிப் பிடித்தனர். மேலும் சிலர் அந்த நபரை செருப்பால் அடிக்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். போலீசாரின் விசாரணையில் அவர் மதுரையில் உள்ள இலங்கை முகாமை சேர்ந்த தினேஷ் பிரவீன்குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் பெயிண்ட்டிங் வேலைக்காக பல்லடத்துக்கு வந்தது தெரியவந்துள்ளது.