ஆடு மேய்க்கச் சென்ற பெண் : சரமாரியாக வெட்டி படுகொலை.. அதிர்ச்சியில் கிராம மக்கள் !

 

ஆடு மேய்க்கச் சென்ற பெண் : சரமாரியாக வெட்டி படுகொலை.. அதிர்ச்சியில் கிராம மக்கள் !

கிராம மக்களுடன் காட்டுப்பகுதிக்குச் சென்ற முருகேசன் அங்குப் பெய்த மழைநீரில் ரத்த வெள்ளமாகப் போவதைக் கண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் தேனிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மனைவி பானுமதி. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல பானுமதி தென்னதிரையன்பட்டி ஆர்.எஸ்.பதி என்னும் காட்டுப்பகுதிக்கு நேற்று ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.

tn

வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது கணவர் அதிர்ச்சியில் இருந்துள்ளார். அதன் பின்னர், அவர் அழைத்துச் சென்ற ஆடுகள் மட்டும் வீடு திரும்பியுள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த முருகேசன் அப்பகுதி மக்களிடம் பானுமதி வீடுதிரும்பாததைப் பற்றிக் கூறியுள்ளார். 

ttn

அதன் பின்னர், கிராம மக்களுடன் காட்டுப்பகுதிக்குச் சென்ற முருகேசன் அங்குப் பெய்த மழைநீரில் ரத்த வெள்ளமாகப் போவதைக் கண்டுள்ளார். சிறிது தூரம்  சென்று பார்த்ததில் அங்கு பானுமதி சரமாரியாக வெட்டப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். மழையில் வெள்ளமாகச் சென்ற பானுமதியின் ரத்தத்தைப் பார்த்து முருகேசனும், கிராம மக்களும் கதறியழுதுள்ளனர்.

ttn

இது குறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே செருப்பு, தொப்பி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, பானுமதியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு மேய்க்கச் சென்ற பெண், சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.