ஆடுகளைத் திருடி சந்தையில் ரூ.24,500க்கு விற்ற நபர்.. கையும் களவுமாகப் பிடித்த போலீஸ் !

 

ஆடுகளைத் திருடி சந்தையில் ரூ.24,500க்கு விற்ற நபர்.. கையும் களவுமாகப் பிடித்த போலீஸ் !

தளவாய்புதூரைச் சேர்ந்த விவசாயி அழகுவேல், அவரது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு வயது 75.

திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புதூரைச் சேர்ந்த விவசாயி அழகுவேல், அவரது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு வயது 75. அழகுவேல் மேய்ச்சலுக்காக ஆடுகளை அழைத்துச் சென்று வரும் போது, அடிக்கடி ஒவ்வொரு ஆடாக காணாமல் போகிக் கொண்டே இருந்துள்ளது. இது குறித்து இவர், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். ஒரு நாள் அழகுவேல், ள ஆறுமுகநேரியில் இருக்கும் ஆட்டுச்சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவர் இவரது ஆடுகளை வைத்திருப்பதைக் கண்டு அவரிடம், யாருடைய ஆடு என்று விசாரித்துள்ளார். 

ttn

அதற்கு அந்த நபர், வியாபாரி ஒருவரிடம் வாங்கியதாகவும் 5 ஆடுகளை  ரூ.24,500க்கு வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அவரும் அவரது நண்பரும் வெளியே சென்றிருப்பதாகவும் சிறிது நேரத்தில் இங்கே வந்து விடுவார்கள், அவர்களிடம் விசாரித்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். உடனேயே அழகுவேல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். 

tttn

காவல்துறையினர் வந்த அதே நேரத்தில், ஆடுகளைத்  திருடிச் சென்றுவரும் வந்துள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அழகு வேலின் ஆடுகளைத் தான் திருடியதாகவும் 2 ஆடுகளை ரூ.5,500 க்கு விற்றதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர், ஆடுகளை மீட்ட போலீசார் அதனை அழகுவேலிடம் ஒப்படைத்தனர்.