ஆடியோவை வெளியிட்டது மாஃபியா இல்லை ஜெயக்குமாரின் மாமியார்: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

 

ஆடியோவை வெளியிட்டது மாஃபியா இல்லை ஜெயக்குமாரின் மாமியார்:  தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

ஜெயக்குமாரின் ஆடியோவை வெளியிட்டது மாஃபியா இல்லை அவரது மாமியார்தான் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

நெல்லை: ஜெயக்குமாரின் ஆடியோவை வெளியிட்டது மாஃபியா இல்லை அவரது மாமியார்தான் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக அப்பெண்ணின் தாயாரும், அமைச்சரும் பேசுவது போன்ற ஆடியோவும், ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழும் நேற்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார், என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் குரல் மார்ஃபிங் செய்துள்ளார்கள். இதன் பின்னணியில் சசிகலா குடும்பமான மாஃபியா கும்பல் இருக்கிறது என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இதுகுறித்து விளக்கமளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், ஜெயக்குமாரின் ஆடியோ வெளியிட்டது மாஃபியா இல்லை அவரது மாமியார்தான். எனது மகள் கர்ப்பமாகிவிட்டார் கருவை கலைப்பதற்கு உதவி செய்யுங்கள் என அவரது மாமியார் தொலைபேசியில் அழுகிறார்.  ஜெயக்குமார் குரல் இருக்கிறது, அவரது மாமியார் குரல் இருக்கிறது இதனை வைத்து நேற்றே இது உண்மையா? இல்லையா? என அரசு விளக்கமளித்திருக்க வேண்டும். அதை விடுத்து ஆடியோ வெளியானதற்கு காரணம் தினகரன்தான் காரணம் என கூறுவது அமைச்சருக்கு அழகல்ல என்றார்.