ஆசை வார்த்தை பேசி பீகாருக்கு அழைத்து செல்ல முயன்ற இளம்பெண்கள்: வடமாநில இளைஞர் கைது
வடமாநில இளைஞரின் ஆசை வார்த்தையை நம்பி, பீகார் செல்ல முயன்ற இளம் பெண்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர்.
சென்னை : வடமாநில இளைஞரின் ஆசை வார்த்தையை நம்பி, பீகார் செல்ல முயன்ற இளம் பெண்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 இளம் பெண்கள் அதே பகுதியில் பள்ளிப்பாளையம் அருகேயுள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தனர். இவர்கள் மூவரும் திடீரென மாயமாகினர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த பள்ளிப்பாளையம் போலீசார், அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் மாயமான 3 இளம்பெண்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தனர். சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார், விசாரணை நடத்தியபோது அவர்கள் நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களை உடன் வேலைபார்த்த பீகாரைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவன் ஆசைவார்த்தை காட்டி அழைத்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் ரவிதாசை கைது செய்ததுடன், இளம்பெண்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.