ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றிய பூ வியாபாரி!

 

ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றிய பூ வியாபாரி!

நொச்சிவயல் புதூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சேதமடைந்துள்ளது

திருச்சி : பூ வியாபாரி ஒருவர் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக நடத்த அனுமதி அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

home

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் தியாகராஜன். பூக்கடை வைத்துப் பிழைத்து வரும் அவர், தன்னுடைய உழைப்பினால் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்ததுடன், குடிசை மாற்று வாரியத்தின் உதவியுடன் ரூ.10 லட்சம் செலவில் வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். 

thigarajan 1

இதனிடையே நொச்சிவயல் புதூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சேதமடைந்துள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தியாகராஜன், தன்னுடைய வீட்டை தற்காலிக பள்ளியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் இந்த செயலுக்காக அவர் எந்த பணத்தையும் வாடகையாகப் பெறவில்லை. மாணவர்களின் நலனை எண்ணிய தியாகராஜனுக்கு அப்பகுதியில் பாராட்டு குவிந்து வருகின்றது.