ஆசையாக தந்தையுடன் கடற்கரைக்கு வந்த சிறுவன்: காவு வாங்கிய ராட்டினம்: பதற வைக்கும் சம்பவம்!?

 

ஆசையாக தந்தையுடன் கடற்கரைக்கு வந்த சிறுவன்: காவு வாங்கிய ராட்டினம்: பதற வைக்கும் சம்பவம்!?

மெரினாவில்  ராட்டினத்தில் அடிப்பட்டு 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: மெரினாவில்  ராட்டினத்தில் அடிப்பட்டு 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பத்மநாபன் சென்னை மெரினா கடற்கரையில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு 8 வயதான பிரணவ் என்ற மகன் இருந்துள்ளார். பிரணவிற்கு பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை  மகனையும் அழைத்து கொண்டு கடற்கரைக்கு சென்றுள்ளார் பத்மநாபன். அப்போது சிறுவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்க பத்மநாபன் தன்  வேலையைப் பார்த்து வந்துள்ளார். 

marina

இதையடுத்து சிறிது தூரத்தில் ராட்டினம் சுற்றி கொண்டிருந்த சிறுவன் அதன் அருகில் வேகமாக ஓடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ராட்டினத்தின் இரும்பு கம்பி பிரணவ்வின் தலையில் ஓங்கி அடித்துள்ளது. இதில் சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை உடனே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

police

இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த மெரினா போலீசார், விபத்துக்குள்ளான ராட்டின உரிமையாளர் பிரகாஷை பிடித்து விசாரித்து வருகின்றனர்.  எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் என்றும் பிரணவ்வின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆசையாக தந்தையுடன் கடற்கரைக்கு வந்த சிறுவன் கடற்கரையிலேயே  பரிதாபமாக உயிரைவிட்ட  சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.