ஆசீர்வாதம் வழங்குவதாக கூறி நகைகளை திருடிச்சென்ற திருநங்கை!

 

ஆசீர்வாதம் வழங்குவதாக கூறி நகைகளை திருடிச்சென்ற திருநங்கை!

சென்னையில் தங்க மோதிரத்தை வைத்து ஆசிர்வாதிப்பதாகக் கூறி நகையை திருடிச் சென்ற திருநங்கையை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னையில் தங்க மோதிரத்தை வைத்து ஆசிர்வாதிப்பதாகக் கூறி நகையை திருடிச் சென்ற திருநங்கையை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை தி.நகர் ராமன் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. நேற்று வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் போது திருநங்கை ஒருவர் வந்து ஆசீர்வாதம் செய்வதாக கூறியுள்ளார். அப்போது சங்கீதா 20 ரூபாய் கொடுத்துள்ளார். 

பின் தங்க மோதிரம் வைத்து ஆசீர்வாதம் செய்தால் பலன் அதிகம் என்று திருநங்கை ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை நம்பி கையில் உள்ள 4 கிராம் தங்க மோதிரத்தை  கொடுத்துள்ளார். ஆசிர்வாதம் செய்வது போல் நடித்து, திடீரென மோதிரத்தை எடுத்து கொண்டு திருநங்கை ஓடியுள்ளார். இது தொடர்பாக சங்கீதா பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.