ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான போட்டித் தேர்வு அடுத்த வாரம் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்.
Sep 28, 2019, 14:13 IST1569660180000
2017-18 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் படாததால், விரைவில் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் படும் என்றும் கூறினார்.
ஈரோட்டில் நடைபெற்ற புதிய பேருந்து விழா துவக்கத்தில் கலந்து கொண்ட பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர், நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், 2017-18 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் படாததால், விரைவில் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் படும் என்றும் கூறினார்.
மேலும், கடந்த ஜூன் 8 மற்றும் 9 ஆம் திதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வுகள் நடத்தப் படும் என்று தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின்றன.