ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் தான் – வேலம்மாள் பள்ளி நிர்வாகம்!

 

ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் தான் – வேலம்மாள் பள்ளி நிர்வாகம்!

தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கிளைகளை கொண்டுள்ள வேலம்மாள் கல்வி நிறுவனம், தனது பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் 50 சதவிகிதம்தான் தர முடியும் என்று அறிவித்துள்ளது. 

தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கிளைகளை கொண்டுள்ள வேலம்மாள் கல்வி நிறுவனம், தனது பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் 50 சதவிகிதம்தான் தர முடியும் என்று அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மத்திய மாநில அரசுகள் கடந்த 19 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தன. இதனால் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படவில்லை. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படவில்லை என்றாலும் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. அரசின் உத்தரவை ஏற்று பல நிறுவனங்கள் முன்கூட்டியே சம்பளம் வழங்கி உள்ளது. சில நிறுவனங்கள் கூடுதலாக ஒருமாதம் சம்பளத்தையும் வழங்கி, தங்களது ஊழியர்கள் வறுமையின் பிடியில் சிக்காமல் இருக்க உதவி வருகிறது.

வேலம்மாள்

இந்நிலையில் வேலம்மாள் பள்ளி நிர்வாகம், தனது பள்ளிக்கல்லூரிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 50 சதவிகிதம் மட்டுமே சம்பளம் தர முடியும் என்று அறிவித்து உள்ளது. மீதமுள்ள 50 சதவிகித சம்பளம் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வழங்குவோம் என்று தெரிவித்து உள்ளது. இது அந்நிறுவனங்களுக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.