ஆசிரியரின் கையை முறித்த 2 மாணவர்கள் கைது!

 

ஆசிரியரின் கையை முறித்த 2 மாணவர்கள் கைது!

சேலம் அருகே வேறு பள்ளியில் சேர்ந்து படிக்குமாறு அறிவுரைக்கூறி மாற்று சான்றிதழ் வழங்கியதால் ஆசிரியரின் கையை முறித்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆத்தூரிலுள்ள தனியார் பள்ளியில் ஆசியராக பணியாற்றி வருகிறார் செல்வராஜ். ஏத்தாப்பூரை சேர்ந்த இவர் தினமும் பள்ளிக்கு பேருந்தில் சென்றுவருவார். இந்நிலையில் அவரிடம் படித்த  17 வயதுடைய பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கு சரியாக படிக்காததாலும், வேறு சில குற்றச்சாட்டினாலும் பள்ளி நிர்வாகம் டிசி வழங்கியது. இதற்கு காரணம் செல்வராஜ் தான் என நினைத்த மாணவர்,  நேற்று முன்தினம் ஆசிரியர் செல்வராஜ், பேருந்தி சென்றுக்கொண்டிருந்தபோது அவரது உறவுக்கார பையனுடன் வந்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். மாணவர்கள் இருவரும் தாக்கியதில் செல்வராஜின் கை முறிந்துள்ளது. இதையடுத்து ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் செல்வராஜ். 

arrested

இது குறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.