ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா – செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

 

ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா – செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

பெய்ஜிங்: ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கு வரும் பிரபல ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிக்கையின் இணையதள பக்கத்தில் ‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும், அந்தக் கட்டுரையில் கொரானா வைரஸ் பரவலை ஆரம்பத்தில் சீனா சரியாக கண்டுகொள்ளவில்லை என விமர்சிக்கப்பட்டிருந்தது. இதனால் கடும் அதிருப்திக்கு உள்ளான சீன அரசு, அந்தக் கட்டுரையை பிரசுரித்த அமெரிக்காவை சேர்ந்த இரு செய்தியாளர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு செய்தியாளரை சீன நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.

ttn

இதையடுத்து அமெரிக்காவை சேர்ந்த இரு செய்தியாளர்கள் மட்டும் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன அரசு பத்திரிகை சுதந்தரத்தில் கை வைத்திருப்பதாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சீனாவை பழிவாங்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள சீன பத்திரிகைகளுக்கு அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விவகாரம் இருநாட்டு உறவிலும் சிறிய விரிசலை ஏற்படுத்தி உள்ளது.