ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தில்லாக முதலில் பேட்டிங் தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான்!

 

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று:  இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தில்லாக முதலில் பேட்டிங் தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான்!

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

துபாய்: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். சூப்பர்-4 சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், தனது கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா அணி இன்று எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் போராடி தோல்வியைத் தழுவி இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே சம்பிரதாய ஆட்டமாக நடைபெறும் இப்போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர்-4 சுற்றில் நாளை நடைபெறும் கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. இதில், வெற்றிபெறும் அணி வருகிற 28-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.