ஆங்கிலேயர் ஆட்சி போல பா.ஜ.க ஆட்சியும் தோல்வியடையும்! – திருமுருகன் காந்தி பேட்டி

 

ஆங்கிலேயர் ஆட்சி போல பா.ஜ.க ஆட்சியும் தோல்வியடையும்! – திருமுருகன் காந்தி பேட்டி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இவர்களுக்கு ஆதரவு அளிக்க மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வந்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தும் பா.ஜ.க அரசும் வீழ்ச்சியடையும் என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இவர்களுக்கு ஆதரவு அளிக்க மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வந்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
“குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் இயற்ற வேண்டும்.
அரசை எதிர்த்து போராடுபவர்களை எல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வழக்கம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தது. கடைசியில் அந்த ஆட்சி தேர்வியடைந்தது. அதுபோல, பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது. இந்த அரசும் தோல்வியடையும். அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்திப்பது இந்திய பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்.மேக் இன் இந்தியா என்று கூறிக்கொண்டே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் செய்துகொள்வது இந்தியாவுக்கு பாதுகாப்பானதாக அமையுமா?” என்றார்.