ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! : இந்திய விமானப் படையை பாராட்டி வைரமுத்து

 

ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! : இந்திய விமானப் படையை பாராட்டி வைரமுத்து

புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் வசிக்கும் பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை: புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் வசிக்கும் பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் வசிக்கும் பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 300 தீவிரவாதிகள் பலி என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. இந்திய எல்லையில் இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானப் படையின் தாக்குதலுக்கு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

vairamuthu

கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், 

போர்மீது விருப்பமில்லை. 
ஆனால், தீவிரவாதத்தின் மீது
தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!
அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்
– என பதிவிட்டுள்ளார்