அ.தி.மு.க, பா.ஜ.க தலைவர்களின் உயிருக்கு ஆபத்தாம்! – உளவுத் துறை எச்சரிக்கை

 

அ.தி.மு.க, பா.ஜ.க தலைவர்களின் உயிருக்கு ஆபத்தாம்! – உளவுத் துறை எச்சரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் நடந்த போராட்டங்களில் கலவரம் வெடித்தது. இதுபோன்று தமிழகத்திலும் வெடிக்க வேண்டுமா என்ற வகையில் பா.ஜ.க-வினர் பேனர் தூக்கிச் சென்றது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அ.தி.மு.க, பா.ஜ.க தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை வெளியிட்டிருப்பது போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உள்ளது என்று கூறப்படுகிறது.

Intelligence

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் நடந்த போராட்டங்களில் கலவரம் வெடித்தது. இதுபோன்று தமிழகத்திலும் வெடிக்க வேண்டுமா என்ற வகையில் பா.ஜ.க-வினர் பேனர் தூக்கிச் சென்றது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிஏஏ-வுக்கு ஆதரவாக உள்ள அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்களுக்கு ஆபத்து என்று உளவுத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

eps-and-ops-and-h-raja

இதனால், அ.தி.மு.க, பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு ஏதும் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு கோவையில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி தாக்கப்பட்டார், சென்னை வண்ணாரப்பேட்டை போலீசுக்கு எம்.எல்.ஏ-க்களை கடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் வந்தது. சி.ஏ.ஏ-வுக்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு வருகிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக இஸ்லாமிய அமைப்புத் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்