‘அவ எப்படி அது மாறி சொல்லலாம்’?: மீரா மிதுனை  வெளுத்து வாங்கிய சாக்ஷி 

 

‘அவ எப்படி அது மாறி சொல்லலாம்’?: மீரா மிதுனை  வெளுத்து வாங்கிய சாக்ஷி 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3யில் கடந்த சில நாட்களாக ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்து விளையாடி வந்தனர். கீரிப்பட்டி மற்றும் பாம்பு பட்டி என்று பிரிந்து விளையாடிய இதில் வழக்கம் போல் சண்டை சச்சரவுக்குப் பஞ்சமில்லாமல் சென்றது. ஒரு வழியாக அந்த டாஸ்க் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

அதில் யாரு இந்த டாஸ்கில் சரியாக விளையாடியது என்பதில் மீரா என்று அனைவரும் பெயர் சொல்ல, உடனே சேரன் மற்றும் மதுமிதா அதை மருத்து கருத்து தெரிவித்தனர். இதனால் கடுப்பான மீரா, cultural difference என்று ஒரு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். 

இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் சாக்ஷி, ‘கேரக்டர்ல இருந்து யாரு வெளிய வந்தது. என்கிட்ட நேரடியா பேசு. இது’ல மொழி மற்றும் cultural difference கொண்டு வராத. இது போன்ற ஒரு வார்த்தையை அவ எப்படி சொல்லலாம்? இந்த வீட்டில நிறைய குழு உள்ளது. எல்லார்க்கும் பின்னாடி பேசுறது தான் வழக்கம்’ என்று கடுங்கோபத்தில் பேசுகிறார். உடனே சேரன், ‘எடுத்தவுடனே எப்படி பெஸ்ட் performer பெயர் வருது. ஒரு வேல காப்பாற்றுகிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

உடனே மீரா, ‘நான் இரண்டு நிமிடம் பேசலாமா?’ என்று அதையே மீண்டும் மீண்டும் கேட்பது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இதை கண்ட ரசிகர்கள், ‘இதே மாறி எத்தனை தடவை எல்லாரும் கேட்ருப்பாங்க? ஆன அது எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர் பாட்டு பேசிக்கொண்டே இருப்பார். மீராவிற்கு இது தான் சரியான அடி’ என்று அவருக்கு எதிராக கமெண்ட் செய்துள்ளனர்.