“அவள கொன்னுட்டேன், நானும் சாகப் போறேன்”… கணவன் மனைவி சண்டையால் நேர்ந்த விபரீதம்

 

“அவள கொன்னுட்டேன், நானும் சாகப் போறேன்”… கணவன் மனைவி சண்டையால் நேர்ந்த விபரீதம்

அரவிந்த் தனது இரண்டு குழந்தைகள் முன்னிலையில் மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் பிவாண்டி நகரத்தின் ஸ்ரீராங் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். அரவிந்த் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ் டி கோகேட் தெரிவித்துள்ளார்.

 

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், அடிக்கடி நடந்த குடும்பச் சண்டையால் கணவன் மனைவியை கொன்றுவிட்டதாக தெரிய வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை,  அரவிந்த் சேகர்வானி என்பவர் தனது மாமாவிற்கு போன் செய்து “தனது மனைவி” சப்னா சேகர்வானி (23) கொலை செய்துவிட்டதாகவும், தானும் தற்கொலை செய்யப் போவதாகவும்” கூறியுள்ளார்” என போலீஸ் இன்ஸ்பெக்டர் மனீஷ் பாட்டீல் தெரிவித்தார். உடனே அவரது மாமா இதுகுறித்து போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

அரவிந்த் தனது இரண்டு குழந்தைகள் முன்னிலையில் மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் பிவாண்டி நகரத்தின் ஸ்ரீராங் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். அரவிந்த் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ் டி கோகேட் தெரிவித்துள்ளார்.

இந்த தம்பதியினர் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதனால் இந்த விபரிதம் நடந்திருக்கலாம் என்றும், கொலைக்குற்றத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணத்தை அறிய விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.