“அவர் காலில் விழுந்து என்னால மன்னிப்பு கேட்க முடியாது” ராதாரவிக்கு பாடகி சின்மயி பதிலடி!

 

“அவர் காலில்  விழுந்து என்னால மன்னிப்பு கேட்க முடியாது” ராதாரவிக்கு பாடகி சின்மயி பதிலடி!

டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரியான  ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.ரவி அறிவித்தார்

வைரமுத்து விவகாரத்திற்கு பிறகு  சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது   ராதாரவி – சின்மயி மோதலுக்கு  வழி வகுத்தது. இதனால் படவாய்ப்புகள்  இல்லாமல் இருந்தார் சின்மயி. இதையடுத்து டப்பிங் சங்கத்தின் தேர்தல் வரும் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட அவரை எதிர்த்து  ராமராஜ்யம் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிடுவதாக அறிவித்து சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.   இருப்பினும் பாடகி சின்மயி தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் நடிகர் ராதாரவி டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரியான  ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.ரவி அறிவித்தார்.

 


 

இருப்பினும் பொதுச்செயலாளர், துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கான தேர்தல்  அவிச்சி பள்ளியிலிருந்து கோயம்பேடு செல்லும் சாலையில் அமைந்துள்ள AKR மஹால் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. இதனால் ராதாரவிக்கு எதிராக பிரசாரம் செய்ய தேர்தல் நடைபெறும் இடத்திற்கு சின்மயி சென்றுள்ளார்.

இந்நிலையில், சின்மயி மன்னிப்பு கேட்டால் டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்ப்போம் என்று ராதாரவி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, அவர் காலில்  விழுந்தோ, வீட்டிற்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது. நான் இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றார்.