“அவரை எதிர்த்து உன்னால வாழமுடியுமா”.. ஓட்டுநரைச் சரமாரியாக வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல்!

 

“அவரை எதிர்த்து உன்னால வாழமுடியுமா”.. ஓட்டுநரைச் சரமாரியாக வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல்!

சென்னை பள்ளிக்கரணையில்  மாம்பாக்கம் பிரதான சாலை, நேரு நகர் சந்திப்பில் நேற்று இரவு ஓட்டுநராக பணியாற்றி வரும்  முத்து செல்வம் (35) என்பவர் சென்று கொண்டிருந்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில்  மாம்பாக்கம் பிரதான சாலை, நேரு நகர் சந்திப்பில் நேற்று இரவு ஓட்டுநராக பணியாற்றி வரும்  முத்து செல்வம் (35) என்பவர் சென்று கொண்டிருந்துள்ளார். அவர் தனியாகச் செல்வதை நோட்டமிட்டு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர்கள் முத்துவை வெட்டும் போது முருகாவை எதிர்த்து நீ வாழ முடியுமா என்று கூறிய படி வெட்டியதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமில்லாமல் அவர் மீது நாட்டு வெடிகுண்டையும் வீசி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். 

ttn

இதில் படுகாயம் அடைந்த முத்து, உயிருக்குப் போராடிய நிலையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வெட்டப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் கொலை செய்ய முயன்றவர்கள் அதிமுகவை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என்றும் தெரிய வந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் அதன் காரணமாகக் கூட இந்த கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.