‘அவன் வற்புறுத்தியதால் பெண்ணாக மாறி திருமணம் செய்தேன்’ போலீசில் திருநங்கை மனைவி பரபரப்பு புகார்!

 

‘அவன் வற்புறுத்தியதால் பெண்ணாக மாறி  திருமணம் செய்தேன்’ போலீசில் திருநங்கை மனைவி பரபரப்பு புகார்!

திருமணம் செய்து கொள்கிறாயா என்று சந்தோஷ் அபிஷேக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு அபிஷேக் முதலில் மறுக்க, பின் ஏற்றுக்கொண்டார்.

தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் மாவட்டம் பெத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு கல்லூரியில் படிக்கும் போது அபிஷேக் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அபிஷேக் இயல்பிலேயே பெண் தன்மை கொண்டவராக இருந்துள்ளார். இதனிடையே அபிஷேக்கும் சந்தோஷும் நெருங்கிய நண்பர்களாக மாற, கல்லூரி காலம் முடியும் தருவாயில் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று சந்தோஷ் அபிஷேக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு அபிஷேக் முதலில் மறுக்க, பின் ஏற்றுக்கொண்டார்.

tt

அதன் பிறகு சில நாட்களில்,  நீ அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுமையாக பெண்ணாக மாற வேண்டும் என அபிஷேக்கை சந்தோஷ் வற்புறுத்தியுள்ளார். இதனால் அபிஷேக்கும்  பாலினமற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியதுடன் தன் பெயரை அர்ச்சனா என்ற மாற்றிக்கொண்டுள்ளார்.

ttn

இதன்பிறகு இருவரும் வீடு ஒன்று எடுத்து தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு அபிஷேக்கை சந்தோஷ் அடித்து துன்புறுத்து வந்துள்ளார். பின் உன்னுடன் என்னால் வாழ முடியாது என்றும் கூறி விட்டுச்சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷேக்,  தன்னை பெண்ணாக மாறச் செய்து, திருமணம் செய்துகொண்டு சந்தோஷ் ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கைகள் நலச்சங்கத்திலும், போலீசாரிடமும்  புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.