அவனோட காதல் -இவனோட கல்யாணம் -இன்னொருத்தனோட கள்ள காதல்….கடைசியா கள்ள காதலனால் கொல்லப்பட்ட நல்ல காதலன் ..

 

அவனோட காதல் -இவனோட கல்யாணம் -இன்னொருத்தனோட கள்ள காதல்….கடைசியா கள்ள காதலனால் கொல்லப்பட்ட நல்ல காதலன் ..

பரேலியில் உமா என்ற 28 வயது பெண் தனது கணவரோடு கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தார். அப்போது அவருடைய காதலன் யோகேஷ் வாழ்க்கையில் குறுக்கே வந்தார். அதனால் அவருடைய கணவன் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து விட்டு காதலனுடன் வாழ முடிவு செய்து ஓடி வந்தார். ஓடி வந்த இடத்தில காதலன் யோகேஷ் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளி போட்டுக்கொண்டே வந்தார்

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலியில் உமா என்ற ஒரு பெண்ணின் காதலர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனதால், ஒரு காதலனை  தீர்த்து கட்டியதால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். 

பரேலியில் உமா என்ற 28 வயது பெண் தனது கணவரோடு கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தார். அப்போது அவருடைய காதலன் யோகேஷ் வாழ்க்கையில் குறுக்கே வந்தார். அதனால் அவருடைய கணவன் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து விட்டு காதலனுடன் வாழ முடிவு செய்து ஓடி வந்தார். ஓடி வந்த இடத்தில காதலன் யோகேஷ் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளி போட்டுக்கொண்டே வந்தார் .இதனால் விரக்தியடைஞ்ச உமா இவன் அந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு வேறொரு காதலனை பிடித்தார் .
அந்த புது காதலன் பெயர் சுனில் .சுனிலோடு சுற்றுவதால் கோபமடைந்த யோகேஷ் அவரை கண்டித்தார் .இதனால் கடுப்பான உமா யோகேஷை போட்டு தள்ள முடிவு செய்தார் ,அதனால் யோகேஷை ஒரு தனிமையான இடத்திற்கு வரவைத்தார் ,அவர் பேச்சை நம்பி வந்த யோகேஷு அங்கு ஏற்கனவே இருந்த சுனிலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார், போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு 24 மணி நேரத்தில் இந்த காதல் குற்றவாளிகளை கைது செய்தனர்