‘அவனுக்கு கொரோனா இருக்கு’.. வாட்ஸ் ஆப்பில் நண்பன் பரப்பிய வதந்தியால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்!

 

‘அவனுக்கு கொரோனா இருக்கு’.. வாட்ஸ் ஆப்பில் நண்பன் பரப்பிய வதந்தியால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்!

இவர் சில நாட்களுக்கு முன்னர், வெளியே செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள  லஞ்சமேட்டை என்னும் பகுதியில் வசித்து வருபவர் அழகர்சாமி (28). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்னர், வெளியே செல்வதற்காக பஸ்  ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முத்துக்குமார் என்ற நபர், அழகர்சாமியை பார்த்து நீ கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று வாட்ஸ் ஆப் குரூப்பில் வீடியோ வந்தது என்று கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அழகர்சாமி அந்த குரூப்பை சோதித்து பார்த்ததில் ஐயப்பன் என்ற அவரது நண்பர் அதனை அனுப்பியிருந்தது தெரியவந்துள்ளது.

ttn

அதனையடுத்து அந்த வீடியோ பற்றி உடனே அழகர்சாமி ஐயப்பனிடம் கேட்டுள்ளார் . அதற்கு அவர் நம் கம்பெனியில் வேலை பார்க்கும் ராஜ்குமார் தான் அந்த வீடியோவை அனுப்பியதாக கூறியுள்ளார். இதனையடுத்து அழகர்சாமி கொடுத்த புகாரின் பேரில்  ஐயப்பன், ராஜ்குமார் ஆகிய நபர்களை கைது செய்துள்ளனர். இது குறித்து பேசிய போலீசார், கொரோனாவின் தீவிரம் தெரியாமல் வதந்திகளை பரப்பி வருகின்றன. கொரோனவை தடுக்க சுகாதாரத்துறையும் தமிழக அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இது போன்ற வதந்தியை பரப்பாமல் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.