அவதூறு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகிறார் அன்புமணி ராமதாஸ்

 

அவதூறு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகிறார் அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், அமைச்சரைப் பாதுகாக்க காவல்துறை முயற்சிக்கிறது என குறிப்பிட்டிருந்தது தொடர்பாக அன்புமணி மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த அந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை நேரில் ஆஜராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.