அவசர திருமணம் செய்து கொண்டது ஏன்? நடிகர் யோகி பாபு விளக்கம்!

 

அவசர திருமணம் செய்து கொண்டது ஏன்?  நடிகர் யோகி பாபு விளக்கம்!

இவரது நடிப்பில் வெளியான தர்ம பிரபு, கூர்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சின்னதிரை மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். குறிப்பாக அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ள அவர் தனது கடின உழைப்பால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பாரில் இணைந்துள்ளார். இவர் சமீப காலமாக ஹீரோவாகவும் பல படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான தர்ம பிரபு, கூர்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து  நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும்   கடந்த 5 ஆம் தேதி  யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. யோகி பாபுவின் திடீர் திருமணத்திற்கு என்ன காரணம்  என்று பலரும் குழப்பத்திலிருந்தனர். 

ttn

இந்நிலையில் திடீரென்று  அவசர அவசரமாகத் திருமணம் செய்து கொண்டது ஏன் என்று நடிகர் யோகி பாபு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் பலரையும் அழைக்க முடியவில்லை. பலரையும் அழைத்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.

ttn

ஆனால் தனது குடும்பத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் அவசரமாகத் திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. கண்டிப்பாக மார்ச் மாதத்தில் வரவேற்பு  நிகழ்ச்சி வைத்து அனைவரையும் அழைப்பேன்’ என்றார்.