அவசர சிகிச்சை பிரிவில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காமுகர்கள்!
அவசர சிகிச்சை பிரிவில் சிறுமியை 4 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரேலி: அவசர சிகிச்சை பிரிவில் சிறுமியை 4 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் பரேலி நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் ICU வார்டில், உடல்நிலை சரியில்லாத சிறுமி ஒருவர் ஐந்து நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி தனிமையில் இருந்த போது மருத்துவமனை சீருடையுடன் 4 பேர் அந்த அவசர சிகிச்சை அறைக்குள் நுழைந்துள்ளனர்.
அதன்பின், சிறுமிக்கு கட்டாயப்படுத்தி ஊசி போட முயன்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமி, ஊசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்ததையடுத்து, சிறுமி வாயை பொத்தி, கைகளை கட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
Minor girl raped inside ICU in Uttar Pradesh
Read @ANI story | https://t.co/jIHZv9iYEo pic.twitter.com/14IxGnY8IK
— ANI Digital (@ani_digital) November 4, 2018
இதுகுறித்து தன் பாட்டியிடம் சிறுமி கூறியதையடுத்து, அந்த பேரில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், தப்பியோடிய மற்ற நபர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.