‘அவங்க அப்பாவுக்கு அடிபட்டிடுச்சி…’ தலைமை ஆசிரியரை ஏமாற்றி சிறுமியை அழைத்து சென்ற இளைஞருக்கு அடி, உதை!

 

‘அவங்க அப்பாவுக்கு அடிபட்டிடுச்சி…’ தலைமை ஆசிரியரை ஏமாற்றி சிறுமியை அழைத்து சென்ற இளைஞருக்கு அடி, உதை!

சிறுமியின் தந்தைக்கு அடிபட்டுவிட்டது என்று கூறி அழைத்து சென்றுள்ளார். பக்கத்துக்கு வீட்டு அண்ணா தானே என்று அந்த சிறுமியும் உடன் சென்றுள்ளார். 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.  நேற்று வழக்கம்போல சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது மாலை 3.30 மணியளவில் அவரின் பக்கத்து வீட்டைச்சேர்ந்த வினோத்குமார் என்ற 30 வயது இளைஞர் ஒருவர், பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்த்து சிறுமியின் தந்தைக்கு அடிபட்டுவிட்டது என்று கூறி அழைத்து சென்றுள்ளார். பக்கத்துக்கு வீட்டு அண்ணா தானே என்று அந்த சிறுமியும் உடன் சென்றுள்ளார். 

ttn

பின்னர் சிறுமியின் தந்தைக்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது தந்தைக்குப்  பள்ளி தலைமை ஆசிரியர் போன் செய்துள்ளார். அப்போது போனை எடுத்த  சிறுமியின் தந்தை, எனக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே நல்லா தானே இருக்கேன் என்று கூற அதிர்ந்து போன தலைமை ஆசிரியர் மாணவியை தேடி சென்றுள்ளார்.

ttn

அப்போது அங்குள்ள விவசாய நிலமொன்றில், மாணவியை மிரட்டி வினோத்குமார் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். வினோத்குமார் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸார், ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.