அழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி?

 

அழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி?

பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த நளினிக்கும் பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த சசிகுமாருக்கும்  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு  3 குழந்தைகள் உள்ள நிலையில்  கருத்து வேறுபாடு காரணமாக நளினி தனது ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இதையடுத்து அப்போது முரளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால், வாணியம்பாடி அருகே தனியாக வீடு எடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே உடல்நலம் சரியில்லை எனக் கூறி தனது ஒன்றரை வயது மகளை   வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நளினி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதுடன், உடலில் காயங்கள் இருப்பதால் குழந்தையை உடல்கூறு பரிசோதனை செய்த பின்புதான் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். அதே சமயம்  நளினியின் தந்தையும் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் நளினி, முரளியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குழந்தையை ஜல்லி கரண்டி மற்றும் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.