அழகு நிலையத்துக்குள் அதிரடியாக போன போலீஸ்-அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சி …

 

அழகு நிலையத்துக்குள் அதிரடியாக போன போலீஸ்-அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சி …

புதுச்சேரி முதலியார்பேட்டையில் 100 அடி  சாலையில் RTO அலுவலகம் அருகே   ஜெயச்சந்திரன் என்பவரும் அவருடைய மனைவி வாணிஸ்ரீ என்பவரும் சேர்ந்து ஒரு அழகு நிலையம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் பியூட்டி பார்லரில் நடைபெற்ற போலீஸ் அதிரடி சோதனையில் அங்கு விபச்சாரம் செய்த பல பெண்களை போலீசார் மீட்டனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டையில் 100 அடி  சாலையில் RTO அலுவலகம் அருகே   ஜெயச்சந்திரன் என்பவரும் அவருடைய மனைவி வாணிஸ்ரீ என்பவரும் சேர்ந்து ஒரு அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். அந்த அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக வெள்ளிக்கிழமை போலிஸுக்கு தகவல் கிடைத்தது. அதனால் போலீசார் அந்த அழகு நிலையத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

puducherry

அப்போது அந்த ரெய்டில் அங்கு இருந்த புதுச்சேரியை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணையும் ,தமிழ்நாடு திண்டிவனத்தை சேர்ந்த 4 பெண்களையும் போலீசார் மீட்டனர் .மேலும் 27 வயதான ஒரு வாடிக்கையாளரும்  கைது செய்யப்பட்டார். அவரோடு அந்த அழகு நிலைய உரிமையாளர் 43 வயதான ஜெயச்சந்திரன், மற்றும் 41 வயதான வாணிஸ்ரீ ஆகியோரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பிறகு அந்த அழகு நிலையத்தை பூட்டி சீல் வைத்தனர் .