அழகாக இல்லை என்று கூறிய கணவன்: முகத்தில் வெந்நீரை ஊற்றிய மனைவி: உண்மை நிலவரம் என்ன?

 

அழகாக இல்லை என்று கூறிய கணவன்: முகத்தில் வெந்நீரை ஊற்றிய மனைவி: உண்மை நிலவரம் என்ன?

கருப்பாக இருக்கிறாய் அழகாக இல்லை என மனைவியை கிண்டல் செய்த கணவன் முகத்தில் மனைவி கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கருப்பாக இருக்கிறாய் அழகாக இல்லை என மனைவியை கிண்டல் செய்த கணவன் முகத்தில் மனைவி கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் சியாம் வெஸ்லி. இவர் மனைவி கிறிஸ்டி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. சியாம் வெஸ்லி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர் மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக சமீப காலமாக மனைவியின் அழகை குறிப்பிட்டு கருப்பாக இருக்கிறாய் அழகாக இல்லை என்று திட்ட துவங்கியுள்ளார்.
இதையடுத்து நேற்று வழக்கம் போல் மது போதையில் கிறிஸ்டியை அழகாக இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்டி, கொதிக்கும் சுடுதண்ணீரை எடுத்து வந்து கணவன் சியாம் வெஸ்லி முகத்தில் ஊற்றியுள்ளார். இதனால் முகம் வெந்து சியாம்வெஸ்லி அலறி துடித்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறி துடித்த சியாம் வெஸ்லியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விவகாரம் குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.