அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை; அதிகாரி திட்டியதால் மனமுடைந்து விபரீத முடிவு

 

அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை; அதிகாரி திட்டியதால் மனமுடைந்து விபரீத முடிவு

அலுவலக வளாகத்திலேயே வேளாண் விரிவாக்க மைய அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவாரூர்: அலுவலக வளாகத்திலேயே வேளாண் விரிவாக்க மைய அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி அருகே வள்ளூர் கிராமத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் கிடங்கு மேலளாராக முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல இன்று காலை பணிக்கு வந்த இவர், அலுவலக அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், முருகேசனின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்ததும் விவசாயிகள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையத்தில் பணிபுரியும் கிடங்கு மேலாளர்களுக்கு, கூடுதல் இயக்குநர் தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. கூட்டத்தின் போது, முருகேசனை கூடுதல் இயக்குநர் அனைவரது முன்னிலையிலும் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த முருகேசன் வீட்டிற்கு சென்ற பின்னரும் சோகமாகவே இருந்துள்ளார். இதையடுத்து, வழக்கம்போல பணிக்கு வந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்து விட்டார் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.