அலுமினிய கம்பியால் மின்சாரம் தாக்கி பலியான சிறுவன்!
கோகுல் என்ற மகனும் உள்ளனர். கோகுல் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே ராஜீவ் நகரைச் சேர்ந்த மணிகண்டன். இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், கோகுல் என்ற மகனும் உள்ளனர். கோகுல் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை கோகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடியுள்ளார். அப்போது பந்து கைக்கு எட்டாத தொலைவில் விழவே பந்தை வீட்டு மாடியிலிருந்த அலுமினிய கம்பியை கொண்டு எடுத்துள்ளார்.
பந்தை எடுத்து முடித்து கம்பியை வைக்க போன போது, அங்கிருந்த மின்சார கம்பியில் அலுமினிய கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி கோகுல் தூக்கிவீசப்பட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஓடிவந்த அவரின் பெற்றோர் கோகுலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுவன் கோகுலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இதை கேட்டு கோகுலின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.